Last Updated:
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் ஜோதிபா கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
மகாராஷ்டிராவில் இரு பக்தர்களை சுற்றிவளைத்து அர்ச்சகர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் வளாகத்திற்குள் அத்துமீறியவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் ஜோதிபா கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த நிலையில் கோயிலில் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் அதிகளவில் கூடியுள்ளனர்.
அப்போது, பக்தர்கள் இருவர் அர்ச்சகர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. உடனடியாக, ஒன்று திரண்ட அர்ச்சகர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாகியுள்ளது. இதையடுத்து, 20க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் அப்பாவி பக்தர்கள் இருவரை சுத்துப் போட்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். அவர்கள் ஆக்ரோஷமாக தாக்கியதில் இருவரும் நிலைகுலைந்துள்ளனர். அடாவடி அர்ச்சகர்களில் ஒருவர் பூஜைக்காக வைத்திருந்த தேங்காயை எடுத்து பக்தரின் தலையில் அடித்து கொலைவெறித் தாக்குதல் தொடுத்துள்ளார்.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற பக்தர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி கோலாப்பூரில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இரு பக்தர்களை அர்ச்சகர்கள் எதற்காக தாக்கினார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை என கூறப்படுகிறது. இருந்தபோதும் வீடியோ அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பூஜையில் பக்தர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அர்ச்சகர்கள்… தலையில் தேங்காயை அடித்து அத்துமீறல்…


