வடக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மீள நாட்டிற்கு வர வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (17) வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன்
பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் நாடு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் இருந்து பலர் புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.
அவர்கள் மீள
நாட்டிற்கு வர வேண்டும், எமது நாட்டினை கட்டியொழுப்ப தங்கள் முதலீடுகளை
நாட்டில் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நாட்டை கட்டியொழுப்ப நாட்டிற்கு வருகை தர
வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.
இந்த நாட்டில் கடந்த காலங்களில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம்
இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பாகுபாடு
இருந்தது.
இனிஅவ்வாறு இருக்காது, அனைவருக்கு சட்டம் பொதுவானதாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

