மாணவர்கள் தங்களை அழைத்து வந்த மாவட்ட பொறுப்பாளருக்கு நன்றி தெரிவிக்கும் போது, அஜிதா பெயரை சொல்லும் போது நேரலை துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் மாவட்ட செயலாளர் பிரச்சனையில், போட்டியாளர்களில் ஒருவராக கருதப்படும் அஜிதாவுக்கு, விழாவில் வரவேற்பு அளிக்கப்படாதது, அம்மாவட்ட நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலையிட்டு பிரச்னையை சுமூகமாக தீர்த்துவைக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

