வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் அவரவர் தேர்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பிரமாண்டமான பஹந்தி ஊர்வலம் திட்டமிடப்பட்டுள்ளது. புரி கஜபதி மகாராஜா திப்யசிங்க தேப் பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை பாரம்பரியமாக நடத்தப்படக்கூடிய சேரா பஹன்ரா சடங்கை நடத்துவார்.
3 தேர்களிலும் மரக் குதிரைகள் இணைக்கப்பட்ட பின்னர், மாலை 4 மணிக்கு ரத யாத்திரை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத யாத்திரைக்கு முன்னதாக, தேர்களின் உச்சியில் ஹனுமான் சிலைகள் பொறுத்தப்பட்டு, புனிதக் கொடிகள் கம்பங்களில் பொருத்தப்படும்.
இன்று(ஜூன் 27) விடியற்காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கிய இந்த யாத்திரைக்கான சடங்குகள், அதைத் தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.
ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோயிலுக்கு இழுத்துவரப்படும்.

