Last Updated:
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 20-ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா பங்கேற்பாரா இல்லையா என இன்று தெரிந்து விடும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பங்கேற்பது குறித்து பிசிசிஐ இன்று இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக பாதியிலேயே விலகிய பும்ரா, தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் விளையாடாமல் உள்ளார்.
அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் பும்ரா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அதற்குள் பும்ரா பூரண குணமடைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க – ரோகித் சர்மா அதிரடி சதம்.. ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் வென்றது இந்திய அணி
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா இடம் பெற்றுள்ள நிலையில், அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து பிசிசிஐ இன்று இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 20-ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
February 11, 2025 4:36 PM IST


