கைது செய்யப்பட்ட இளம்பெண் சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேத்தன் ஆகிய இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் அவர்கள் இருவரையும் கொலை நடந்த லோஹாகாட் கோட்டை பகுதிக்கு அழைத்துச் சென்ற நிலையில், கொலையை அரங்கேற்றியது எப்படி? என்பதை போலீசார் முன்பு இருவரும் நடித்துக் காட்டினர்.
முன்னதாக இந்த கொலையை அரங்கேற்ற இருவரும் சேர்ந்து தீட்டிய திட்டங்கள் குறித்த பகீர் தகவல்கள் விசாரணையில் அம்பலமாகியுள்ளன. இளம் தொழிலதிபர் கேத்தன் விஷாலை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்த பின்னர், கொலை செய்வது எப்படி? என்பதற்கான வழிகளை இணையதளத்தில் இருவரும் தேடியுள்ளனர்.
அதன்படி, உயரமான இடத்தில் இருந்து தள்ளிவிட்டு கேத்தன் விஷாலை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் மொபல் போனில் இருவரும் பேசிக் கொண்ட பழைய தரவுகள் அனைத்தையும் அழித்துள்ளனர். கொலையை செய்து முடித்த பிறகு அந்த இடத்தில் இருந்து எப்படி வெளியேற வேண்டும்? போலீசாரிடம் என்ன சொல்ல வேண்டும்? என அனைத்தையும் திட்டமிட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி, சியா கோயல் தனது காதலன் சேத்தனுடன் முன்பே லோஹாகாட் கோட்டைக்கு சென்று, அங்குள்ள மலையில் இருந்து கேத்தன் விஷாலை எப்படி தள்ளிவிட வேண்டும் என்று பயிற்சி செய்துள்ளார். இந்த கொலை திட்டம் தோல்வி அடைந்துவிட்டால், வேறு வழிகளில் கொலையை அரங்கேற்றவும் அவர்கள் தயாராக இருந்துள்ளனர்.
தோல்வியடைந்த முதல் கொலை முயற்சி
