காத்தான்குடியில் இருந்து இம் முறை புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு செல்லும் ஹாஜிமார்களை வழியனுப்பும் வைபவம் நேற்று (19) இரவு காத்தான்குடி 5 ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் பொறியாளர் ஏ எம்.தெளபீக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விஷேட உரையை அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி நிகழ்த்தினார்.
இதில் சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்க் இல்ஹாம் உட்பட சம்மேளன பிரதி தலைவர்கள் பள்ளிவாசல்கள் நிர்வாகிகள், உலமாக்கள் சம்மேளன நிருவாக உறுப்பினர்கள், ஹாஜிமார்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது விஷேட துஆப் பிராத்தனை இடம்பெற்றது.
பிரார்த்தனையை காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஹாரூன் ரஷாதி நடாத்தினார்.
காத்தான்குடியில் இருந்து இம் முறை புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு செல்லும் ஹாஜிமார்களுக்கு சலாம் கூறி முஸாபாஹா செய்து கொண்டனர்.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்


&w=1200&resize=1200,675&ssl=1)