கோலாலம்பூர்:
புத்ராஜெயாவின் 17வது பிரிவின் மேம்பாலம் அருகே உள்ள ஒரு குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் ஒருவன் இறந்த நிலையில் மீட்கப்பட்டான்.
நேற்று மாலை 5.12 மணிக்கு பொதுமக்களிடமிருந்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு முதற்கட்ட தகவல் கிடைத்ததாக புத்ராஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.
அந்த வழியாகச் சென்றவர்கள் சிறுவனைக் கண்டுபிடித்து புத்ராஜெயா மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வந்ததாகவும், சிறுவனின் மரணத்தை அங்கிருந்த மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்றும், நாளை காலை 8 மணிக்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும்,” என்றும் அவர் கூறினார்.
சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர் தனது இரண்டு நண்பர்களுடன் குளத்தில் நீந்திக் கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக ஐடி ஷாம் கூறினார்.
The post புத்ராஜெயா குளத்தில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் 12 வயது சிறுவனின் சடலம் மீட்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

