Courtesy: தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் தமிழரசு கட்சியின்
பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலனுக்கு எதிராக நிதிக்குற்றவியல்
பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வி.பி.பவுண்டேசன்
அமைப்பின் ஸ்தாபர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் நேற்று (22) அவர் மேற்கொண்ட ஊடக
சந்திப்பின் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வறுமைக்குட்பட்ட மக்களின் கூட்டுறவு செயற்பாட்டிற்காக புலம்பெயர் மக்களால் அனுப்பப்பட்ட பணத்தை அதனை நிர்வகிக்கும் குறித்த தவிசாளர் மோசடி
செய்துள்ளார். அது மக்களின் பணம் மக்களிடம் செல்லவேண்டும் என்பதே எனது கோரிக்கை.
முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவாலயம்
தவிசாளராக
மக்கள் வாக்களித்து தமிழரசு கட்சியில் தெரிவு செய்துள்ளார்கள். தமிழரசுக் கட்சிக்காக பல்வேறு சேவைகளை செய்து வந்துள்ளோம். இந்த நிலையில் கட்சியின்
பொதுச்செயலாளருக்கு ஒன்றினை சொல்ல விரும்புகின்றேன்.
நீங்கள் தமிழரசுக் கட்சியில் சிறப்பு மிக்க சக்தியான ஒரு தலைவராக வரவேண்டும்
என்றால் முதலாவது கொழும்பில் ஒருபேச்சும் வடகிழக்கில் இன்னொரு பேச்சும்
பேசுவதை நிறுத்தவேண்டும். நீங்கள் புத்திசாலி என்று தெரியும்.

நீங்கள் மேதினத்தில்
தட்டிச்சொன்னீர்கள் எங்கள் கட்சி ஊழல் இல்லா கட்சி, ஊழல் செய்பவர்கள் யாராக
இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னீர்கள்.
நான் இந்த ஊடக
கருத்தூடாக தவிசாளரின் ஊழலினை சொல்லியுள்ளேன் இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை
எடுக்கின்றீர்கள் என்று பார்ப்போம்.
நீங்கள் தவறு செய்கிறீர்கள் தவறுகள் மன்னிக்கப்படவேண்டும்.
மக்கள் உங்களை
ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் உங்களால் முடிந்தால் உங்கள் சட்ட வல்லமையினை
நீங்கள் பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒரு நினைவாலையத்தினை கட்டுங்கள்
(சட்டத்தில் இடம் இருக்கின்றது) அதனை செய்தால் இந்த மக்கள் உங்கள் பின்னால்
வருவார்கள்.
தமிழரசுக் கட்சியின் தலைவர்
உங்களால் முடியுமாயால் செய்துகாட்டுங்கள் அவ்வாறு செய்தால் இந்த
மக்களுக்கு தலைவனாக நீங்கள் இருக்க தகுதியானவர்.
இதனை விடுத்து மேதினத்தில் ஒருவார்த்தையினை சொல்லிவிட்டு மட்டக்களப்பில்
திரைநீக்கம் செய்கின்றீர்கள் என்ன அரசியல் செய்கின்றீர்கள் என்று விளங்கவில்லை.
ஆனால் சி.வி.கே ஜயா போற்றப்படும் ஒரு மனிதர் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற
வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் எனது அமைப்பிடம்
மேற்கொண்ட ஊழல் தொடர்பில் ஆதாரங்களை கட்சியிடம் அனுப்பியுள்ளன். இதற்கு முடிவு
எடுக்கவேண்டும்.

ஆனால் நான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியினை மாற்ற முடியாது. நிதி மோசடி மக்களின் பணம் இந்த விடயத்தில் முன்வைத்த காலினை நான்
பின்வாங்கமாட்டேன்.
தவிசாளர் எனது அமைப்புடன் வரும்போது ஒரு சாதாரண இடத்தில் இருந்தார் இன்று
அவருடைய சொத்து மதிப்பு தொடர்பிலும் நிதி குற்றவியல் திணைக்களத்திற்கு
பாரப்படுத்தியுள்ளேன்.
வவுனியா காவல்நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடும்
பதிவுசெய்துள்ளேன். குற்றம் யார் செய்தாலும் குற்றம் குற்றமே. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பது எனது கோரிக்கை“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

