ஜிபே, போன் பே போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஏப்தல் – மே மாதங்களில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, பணப்பரிமாற்றம் தோல்வியடைதல் போன்றக் காரணங்களால், புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
முக்கியமாக, அடிக்கடி யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகளில், வங்கிக் கணக்கில் இருக்கும் கையிருப்பை காண்பதால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.