2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் (01.01.2025) யாழ்ப்பாண
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி
ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உத்தியோகத்தர்கள்
கலந்து கொண்டிருத்தனர்.

செய்திகள் த.பிரதீபன்
வவுனியா
புது வருடத்தின் முதல் நாளான இன்று அரச உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணம்
செய்யும் நிகழ்வு அனைத்து அரச அலுவலகங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பிரகாரம் வவுனியா மாவட்ட செயலகத்திலும் அரசாங்க அதிபர் பி. ஏ. சரத்
சந்திர தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணம் செய்து தமது
கடமைகளை இன்றைய தினம் ஆரம்பித்தனர்.
அரசாங்க அதிபர் தேசிய கொடியை ஏற்றியிருந்ததுடன் இரண்டு நிமிட மெளன
பிரார்த்தனையும் இடம்பெற்று அதன் பின்னர் சத்திய பிரமாண நிகழ்வும் இடம்பெற்றதையடுத்து சர்வ மத தலைவர்களின் ஆசி உரைகளும் இடம்பெற்றிருந்தது.

செய்திகள் – கபில்
தம்பலகாமம்
2026ம் ஆண்டின் முதலாவது நாளான இன்று (01.01.2026) தம்பலகாமம் பிரதேச
செயலகத்தில் அரச கடமைகளை வைபவ ரீதியாக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டு
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியினால் தேசியக் கொடி
ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் சர்வமதத் தலைவர்களின் மத அனுஷ்டானங்களும் இதன்போது இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து சகல உத்தியோகத்தர்களும் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் நாட்டுக்காக தியாகம் செய்து உயிர் நீத்த முப்படை வீரர்களுக்காக இரு நிமிட மௌன
அஞ்சலியும் இடம்பெற்றது.

இந்த ஆண்டின் உறுதிமொழி
உறுதி மொழியாக ” 2026ம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளாகிய இன்று
இலங்கை சனநாயக சோசலிச குடியரசு முழு நாட்டு மக்களினதும் அபிலாசைகளை
முன்னிலையாகக் கொண்ட இலக்குகளை நனவாக்கும் சுபீட்சம் மிகு புத்தாண்டின்
தொடக்கத்தினை இவ்வாறு தடம்பதிக்கின்றது.
இன்றுடன் ஆரம்பிக்கும் புத்தாண்டில் ஒரே கொடியின் கீழ் நிழல் பெறும் ஒரே
நாடாகவும் ஒரே தேசமாகவும் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கும் குறிக்கோளினால்
ஈர்க்கப்பட்ட மக்களின் அபிமானத்தை எடுத்துரைக்கவும் மற்றும் அவ்வாறே “வளமான
நாடு அழகான வாழ்க்கை ” ஊடாக சவால்களின் முன்னிலையில் தயங்கமாட்டோம் எனும்
தொனிப்பொருளின் சாரத்தை அதனூடாக எடுத்துக்காட்டவும் வழிகாட்டும்
ஒழுங்கமைக்கப்பட்ட அரச நிர்வாகம் ஒன்றின் பங்காளர் ஒருவர் என்ற வகையில்
நான் பொது மக்களின் பணத்திலிருந்து சம்பளம் பெறும் அரச ஊழியர் என்ற வகையில்
அரச கொள்கைகள் மற்றும் இலக்குகளை நடைமுறைப்படுத்தும் போது என்னிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்பினை வினைத்திறனுடனும், பயனுறுதியுடனும்,
செயலூக்கத்துடனும், அதிகூடிய அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், பொது
மக்களுக்கு சார்பாகவும் முழு நிறைவாக நிறைவேற்றுவதாக உறுதி மொழிகிறேன்.“ எனபதாகும்.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர்
B.U.B.L.உடகெதர மற்றும் சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

செய்திகள் – றொசான்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

