• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புதிய பான் கார்டு அறிமுகம்! பழைய பான் அட்டைகள் செல்லுபடியாகாதா? சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம்..!

GenevaTimes by GenevaTimes
November 26, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
புதிய பான் கார்டு அறிமுகம்! பழைய பான் அட்டைகள் செல்லுபடியாகாதா? சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பான் 2.0 என்ற அதிநவீன வசதி கொண்ட பான் அட்டை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனை பெறுவது எப்படி? இதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் வருமான வரித்துறையால் வழங்கப்படும் முக்கிய அடையாள அட்டை பான் கார்டு. வருமான வரி செலுத்துவதற்கு மட்டுமின்றி, வங்கிகளில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் எடுப்பதற்கு, பண பரிமாற்றத்திற்கு என நிதி சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு பான் அட்டை அவசியம். ஒரு நபர், ஒரு பான் அட்டை மட்டும் வைத்திருக்க முடியும் நிலையில், நவீன வசதிகளுடன் கூடிய பான் 2.0 அட்டை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விளம்பரம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், பான் 2.0 அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பான் அட்டையில் கியூஆர் கோடு இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:
பயன்படுத்திய மற்றும் புதிய கார்களுக்கான கடன்கள்: உங்களுக்கான சிறந்த ஆப்ஷன் எது?

தற்போது நடைமுறையில் உள்ள பான் அட்டையில், எண் மற்றும் எழுத்தில் 10 இலக்க அடையாள குறியீடு உள்ளது. இதனை கியூஆர் கோடாக மாற்றுவதன் மூலம், வரி செலுத்துபவர்களுக்கு டிஜிட்டல் சேவை மேம்படுத்தப்படுவதுடன், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.

விளம்பரம்

மேலும், எளிதாக அணுகி விரைவான சேவையை பெறுதல், உண்மைத்தன்மையின் ஒற்றை ஆதாரம் மற்றும் தரவுகளின் நிலைத்தன்மை, பாதுகாப்பு, செலவினம் குறைப்பு என பல்வேறு பயன்கள் இருப்பதாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதனை செயல்படுத்துவதற்கு ரூ.1,435 கோடி செலவிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பழைய பான் அட்டையை மேம்படுத்தி, டிஜிட்டலாக நவீன பான் கார்டு பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கொழுப்பு கல்லீரல் பாதிப்பை குறைக்க உதவும் 6 பானங்கள்.!


கொழுப்பு கல்லீரல் பாதிப்பை குறைக்க உதவும் 6 பானங்கள்.!

இதுகுறித்து அவர் கூறும்போது, “காகிதமின்றி முற்றிலும் ஆன்லைனில் பிரத்யேக இணையதளம் மூலம் இதனை செயல்படுத்த இருப்பதாக” கூறிய அமைச்சர், “பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த மையமாக இது இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

புதிய பான் அட்டை குறித்த சந்தேகங்களுக்கு பதில் இதோ..!

1. புதிய பான் கார்டு வாங்கினால், பழைய பான் கார்டு செல்லுபடியாகாதா?

பதில்: உங்களுடைய பான் எண் மாறாததால், அதை பற்றி வாடிக்கையாளர்கள் கவலையடைய தேவையில்லை என மத்திய அமைச்சர் விளம்மளித்துள்ளார்.

2. உங்களுக்கு புதிய பான் அட்டை வழங்கப்படுமா?

ஆம். உங்களுக்கு இலவசமாக பான் அட்டை வழங்கப்படும். ஆனால் இது முற்றிலும் இலவச சேவை என்பதால், வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.

3. புதிய பான் அட்டையில் என்ன மாற்றம் இருக்கும்?

விளம்பரம்

தற்போதுள்ள பான் கார்டுகளில் உள்ள எண்களுக்கு பதிலாக, புதிய பான் கார்டுகளில் க்யூ.ஆர்.கோடு இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம் இருந்தால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன.?


உயர் இரத்த அழுத்தம் இருந்தால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன.?

4. நாடு முழுவதும் எத்தனை பான் கார்டுகள் உள்ளது?

நாடு முழுவதும் தற்போது 78 கோடி பான் கார்டுகள் அமலில் உள்ளது. அவற்றில் 98% பான் கார்டுகள் தனி நபர்களுடையது.

5. புதிய பான் கார்டுகளை எங்கே பெறுவது?

புதிய பான் கார்டுகள் உங்களுக்கு இலவசமாகவே டெலிவரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

.

Read More

Previous Post

ஐபிஎல் ஏலத்தில் 13 வயது வீரரை எடுத்த ராஜஸ்தான்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி? – News18 தமிழ்

Next Post

அடுத்த ஆண்டு வெள்ளி முதல் ஞாயிறு வரை சிலாங்கூரில் நெகிழி பைகள் பயன்படுத்த தடை – Malaysiakini

Next Post
அடுத்த ஆண்டு வெள்ளி முதல் ஞாயிறு வரை சிலாங்கூரில் நெகிழி பைகள் பயன்படுத்த தடை – Malaysiakini

அடுத்த ஆண்டு வெள்ளி முதல் ஞாயிறு வரை சிலாங்கூரில் நெகிழி பைகள் பயன்படுத்த தடை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin