இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதன் தொடர்ச்சியாக, மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல், கடந்த 9 ஆம் தேதி திடீரென்று ராஜினாமா செய்தார். இந்நிலையில், 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
அதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய உள்துறை செயலர், மத்திய பணியாளர் நலத்துறை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலை குழு, 2 பதவிகளுக்கும் தலா 5 பேரின் பெயர்களை அரசுக்கு பரிந்துரைக்க உள்ளனர். இவர்களில் 2 பேரை பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் அமைச்சர் ஒருவர் அடங்கிய குழு தேர்வு செய்வர்.
இந்நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்பு, 2 பதவிகளுக்கும் தலா 5 பேர் கொண்ட பட்டியலை தனக்கு அனுப்பி வைக்கும்படி எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய சட்டத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…