இது தொடா்பாக கலந்தாலோசனை செய்வதற்காக தில்லியில் சிறப்புக்கூட்டம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், அரசின் தலைமைச் செயலா் டாக்டா் சரத் செளஹான், காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங், காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, தேசிய குற்ற ஆவணக் காப்பக இயக்குநா், மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

