Last Updated:
இதனையடுத்து , நாட்டின் புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் காரணமாக நாடு தழுவிய அளவில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்து , நாட்டின் புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த, செல்வாக்கு மிக்க பாஜக தலைவர்களில் ஒருவர் பிரகலாத் ஜோஷி. 2004-ஆம் ஆண்டு தொடங்கி 2024 வரை, தார்வாட் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து 5 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும், 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் பதவி வகித்து, அங்கு கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தியவர்.
நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதிலும், எதிர்க்கட்சிகளை லாவகமாகச் சமாளிப்பதிலும் இவரது பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.
மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகிய பொறுப்பை வகித்து வருகிறார். தற்போது அவரிடமே கல்வித்துறையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


