இந்நிலையில், மக்களவைக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் ஜூன் 24, 25, 26 ஆகிய தேதிகளில் பதவியேற்க உள்ளனா். எனவே மக்களவை எம்.பி.யாக தானும் பதவியேற்க உள்ளதால் தனக்கு இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ரஷீத் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிரண் குப்தா முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

