ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஆதாரங்களை ரஷ்யா அமெரிக்காவிடம் கையளித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மரியா ஜகரோவா கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், “வால்டை ஏரி அருகே உள்ள புடினின் இல்லத்தை உக்ரைன் 91 ட்ரோன்களால் தாக்கி அழிக்க முயன்றது.
தாக்குதல் முயற்சி
அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவிடம் வழங்கியுள்ளோம்.

இந்தத் தாக்குதல் முயற்சி உக்ரைன் உளவுப் பிரிவால் திட்டமிடப்பட்டது.
அமெரிக்கா இதை உறுதிப்படுத்தும் என்று எதிா்பாா்க்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

