• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘பிஹார் மக்கள் மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்துவிட்டனர்’ – தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை | People of Bihar have decided to bring about change Tejashwi Yadav confident

GenevaTimes by GenevaTimes
November 1, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
‘பிஹார் மக்கள் மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்துவிட்டனர்’ – தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை | People of Bihar have decided to bring about change Tejashwi Yadav confident
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: ‘பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் சிறப்பாக நடக்கிறது. இந்த முறை மகா கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும். பிரச்சாரத்தில் நான் எங்கு சென்றாலும், மக்கள் மாற்றம் நிச்சயம் என்று கூறுகிறார்கள். மக்கள் பிஹாரில் மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளனர்’ என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பிஹார் தேர்தலில் மகா கூட்டணியின் தேர்தல் வாய்ப்புகள், ஆர்ஜேடி குறித்த பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், “பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் சிறப்பாக நடக்கிறது. இந்த முறை மகா கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும். பிரச்சாரத்தில் நான் எங்கு சென்றாலும், மக்கள் மாற்றம் நிச்சயம் என்று கூறுகிறார்கள். புதிய பிஹார் மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது பற்றி அவர்கள் பேசுகிறார்கள். கல்வி, நீர்ப்பாசனம், மருத்துவம், வேலைவாய்ப்புகள் மற்றும் உடனடி நடவடிக்கை பற்றிப் பேசுபவர்களே அரசாங்கத்தை அமைப்பார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். பிஹார் மக்கள் மகா கூட்டணி அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பிஹாருக்கு வரும்போதெல்லாம், எதிர்க்கட்சிகளை ‘காட்டாட்சி’ என்ற முத்திரையுடன் கேலி செய்கிறார்கள். அவர்களிடம் பேசுவதற்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரதமராக இருந்தாலும் சரி, அமித் ஷாவாக இருந்தாலும் சரி, அவர்களின் வார்த்தைகளை நீங்கள் கவனமாகக் கேட்டால், அவர்கள் எதிர்மறை சிந்தனையால் நிறைந்தவர்கள். நாங்கள் நேர்மறை மற்றும் முற்போக்கான அரசியலைச் செய்ய இங்கே இருக்கிறோம். நாங்கள் வளர்ச்சி மற்றும் தொலைநோக்குப் பார்வை பற்றிப் பேசுகிறோம்” என்றார்

தொடர்ந்து பேசிய அவர், “ கடந்த முறையும், நான் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டேன், எந்த மோசடியும் இல்லாதிருந்தால், நாங்கள் அரசாங்கத்தை அமைத்திருப்போம். இருப்பினும், இந்த முறை முழு பிஹாரும் மாற்றத்தை விரும்புகிறது, ஏனெனில் தற்போதைய ஊழல் நிறைந்த அரசாங்கத்தைப் பற்றி மக்கள் உண்மையிலேயே கவலைப்படுகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி பிஹாரை ஆட்சி செய்தாலும், பிஹார் மிகவும் ஏழ்மையான மாநிலம், இடம்பெயர்வு மற்றும் வேலையின்மை மிக அதிகம், தனிநபர் வருமானம் மிகக் குறைவு. தொழில்கள் அல்லது முதலீடு எதுவும் இல்லை. இதனால் மக்கள் இப்போது மாற்றத்திற்கான மனநிலையில் உள்ளனர்.

பல அரசியல் கட்சிகள் வந்து மறைந்துவிடும், தேஜஸ்வி அத்தகைய கட்சிகளுக்கு கவனம் செலுத்துவதில்லை. பல இடங்களில், மகாகத்பந்தனின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே போட்டி உள்ளது. இது ஒரு வியூகத்துக்காக செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்டிலும் இதைச் செய்து நாங்கள் இடங்களை வென்றுள்ளோம்.

பிஹாரும், பிஹார் மக்களும் சிறந்து விளங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எந்த பிஹாரியும் வேலைக்காகவோ, கல்விக்காகவோ அல்லது சிறந்த மருத்துவ சிகிச்சைக்காகவோ மாநிலத்திற்கு வெளியே செல்ல வேண்டியதில்லை. அனைத்து வசதிகளும் பிஹாரில் கிடைக்க வேண்டும். அனைத்து உள்கட்டமைப்புகளும் பிஹாரில் இருக்க வேண்டும். பிஹாரை ஒரு ஐடி மையமாக மாற்றவும், உணவு பதப்படுத்தும் அலகுகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை அமைக்கவும் நான் விரும்புகிறேன்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலைக்கு உறுதியளித்துள்ளேன். இதன் சாத்தியக்கூறுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மக்கள் கேள்விகளை எழுப்பட்டும், நான் என் வேலையைத் தொடர்ந்து செய்வேன். மக்களுக்கு வேலைகள் கிடைக்கும்போது, ​​கேள்விகளை எழுப்புபவர்களிடம் நான் கேள்வி எழுப்புவேன். சாத்தியமற்றதை சாத்தியமாக்குவேன்.

அனைவரையும் எனது வாக்கு வங்கியாக நான் கருதுகிறேன். தேஜஸ்வி அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்புகிறார். அனைவரையும் ஒன்றாக இணைத்து ஒரு புதிய பிஹாரை உருவாக்க விரும்புகிறேன்.

நிதிஷ் குமாருடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைக்க வாய்ப்பு எதுவும் இல்லை. இதுபோன்ற வதந்திகளை நாம் நம்பக்கூடாது. தேர்தலுக்குப் பிறகு, அவரது கட்சியே இருக்காது. அவர் கட்சியிலிருந்து சிலர் பாஜகவில் சேருவார்கள், பாதி பேர் ஆர்ஜேடிக்கு வருவார்கள்.

பாஜக நிதிஷ் குமாரை முகமூடியாக மாற்றியுள்ளது. பிஹாரில் முழு நிர்வாகமும் அமித் ஷாவால் கட்டுப்படுத்தப்படுகிறது. எனக்கு நிதிஷ் குமார் மீது அனுதாபம் இருக்கிறது. அவர் ஒரு இக்கட்டான கட்டத்தில் இருக்கிறார், அவரைப் பற்றி அதிகம் பேச எனக்குப் பிடிக்கவில்லை. பாஜக தலைவர்கள் அவரை நாசமாக்கிவிட்டார்கள். அதைவிட அதிகமாக, அவரது கட்சிக்குள் இருக்கும் பாஜகவால் இயக்கப்படும் தலைவர்கள்தான் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த முறை பிஹாரில் காங்கிரஸ் மிகச் சிறப்பாகச் செயல்படும், மேலும் கடந்த தேர்தலை விட அதிக இடங்களைப் பெறும், ஏனெனில் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

பிஹாரில் முஸ்லிம் துணை முதல்வர் பற்றி ஏதேனும் பேச்சு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​முகேஷ் சஹானியைத் தவிர, மற்றொரு துணை முதல்வர் இருப்பார் என்று தெளிவாகக் கூறப்பட்டது. சரியான நேரத்தில், இரண்டாவது துணை முதல்வர் அறிவிப்பை வெளியிடுவோம்.” என்றார்.



Read More

Previous Post

பத்மேவிடமிருந்து துப்பாக்கி வாங்கிய தொழிலதிபர் கைது

Next Post

போர்ச்​சுகல் அணி​யில் ரொனால்டோ மகனுக்கு இடம்! | cristiano ronaldo son makes portugal under 16 football team debut

Next Post
போர்ச்​சுகல் அணி​யில் ரொனால்டோ மகனுக்கு இடம்! | cristiano ronaldo son makes portugal under 16 football team debut

போர்ச்​சுகல் அணி​யில் ரொனால்டோ மகனுக்கு இடம்! | cristiano ronaldo son makes portugal under 16 football team debut

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin