• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் தோல்வி ஏன்? | Why did the opposition parties suffer a huge defeat in the Bihar election

GenevaTimes by GenevaTimes
November 16, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் தோல்வி ஏன்? | Why did the opposition parties suffer a huge defeat in the Bihar election
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிஹார் தேர்​தலில் மொத்​த​முள்ள 243 தொகு​தி​களில் ஆளும் என்​டிஏ கூட்​டணி 202 இடங்​களை பெற்​றுள்​ளது. அதேசம​யம் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​டணி 35 ஆக சுருங்கி விட்​டது. ஆர்ஜேடி 25 இடங்களை மட்டுமே பெற்றது.

இதில் முக்​கிய ஆதர​வாளர்​களான யாதவ் மற்​றும் முஸ்​லிம்​கள் எதிர்க்கட்​சிகளுக்கு வாக்​களிக்​காதது ஏன் என்ற கேள்வி எழுந்​துள்​ளது. தேர்​தல் ஆணை​யத்​தின் முக்​கிய நடவடிக்​கை​யான எஸ்​ஐஆர் (வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம்) முதல் மாநில​மாக பிஹாரில் அமலானது.

இது தொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி பிஹாரில் வாக்​காளர் அதி​கார யாத்​திரை நடத்​தி​னார். இதன் உச்​ச​மாக மெகா கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ராக ஆர்​ஜேடி தலை​வர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்​கப்​பட்​டார். இவை எது​வுமே மெகா கூட்​ட​ணிக்கு பலன் அளிக்​கவில்லை.

இதன் பின்​னணி​யில் சில முக்​கிய காரணங்​கள் கூறப்​படு​கின்​றன. இதில் ஒன்​றாக மெகா கூட்​ட​ணி​யில் தொடக்​கம் முதலாகவே நம்​பிக்​கை​யின்மை நில​வியது. தனது தந்தை லாலு​வுக்கு பிறகு மெகா கூட்​ட​ணிக்கு தேஜஸ்வி தலைமை தாங்க விரும்​பி​னார். இவருக்கு பின் இருக்​கை​யில் அமர காங்​கிரஸ் விரும்​ப​வில்​லை. யாத்​திரை​யில் கலந்​து​கொண்ட அனைத்து கட்​சிகளும் தேஜஸ்​வியை முதல்​வர் வேட்​பாள​ராக ஏற்​றுக்​கொண்ட போதி​லும் ராகுல் மட்​டும் மவுனம் காத்​தார்.

இதனிடையே இடது​சா​ரி​களும், விகாஸ் இன்​சான் கட்சி (விஐபி) தலை​வர் முகேஷ் சாஹ்னி​யும் வெளிப்​படை​யாக அதிக தொகு​தி​கள் கோரினர். இப்​பிரச்​சினையை பேசித் தீர்க்க பெரிய எதிர்​பார்ப்​புடன் டெல்லி சென்ற தேஜஸ்விக்கு ஏமாற்​றமே மிஞ்​சி​யது. இவரை சந்​திப்​பதை ராகுல் தவிர்த்து விட்​ட​தாக தகவல் வெளி​யானது. இறு​தி​யில் வேறு​வழி​யின்றி கட்​டா​யத்​தின் பேரில் முதல்​வர் வேட்​பாள​ராக தேஜஸ்வி அறிவிக்​கப்​பட்​டார். இது​வும் மெகா கூட்​ட​ணி​யின் ஒரு முக்​கியப் பின்​னடை​வாக பார்க்​கப்​படு​கிறது.

அதே​போல் விஐபி கட்​சித் தலை​வர் முகேஷ் சாஹ்னியை துணை முதல்​வர் வேட்​பாள​ராக அறி​வித்​ததும் பெரிய தவறாகக் கருதப்​படு​கிறது. ஏனெனில், இந்த அறி​விப்பு ஆளும் என்​டிஏ​வால் ஏற்​கெனவே தீவிர​மாக முன்​னிறுத்​தப்​பட்டு வந்த மகா தலித் சமூகத்தை அந்​நியப்​படுத்​தி​யது. மேலும், மெகா கூட்​டணி ஆட்சி அமைந்​தால் மற்​றொரு துணை முதல்​வர் உண்டு என்​றவர்​கள் அவரது பெயரை அறிவிக்​க​வில்​லை. இது பிஹாரில் சுமார் 20 சதவீதம் உள்ள முஸ்​லிம்​களை கோபப்​படுத்​தி​யது. இது​வும் முஸ்​லிம் பகு​தி​யில் மெகா கூட்​ட​ணி​யின் பலவீன​மான பிரச்​சா​ர​மும் இழப்பை ஏற்​படுத்தி விட்​டது. வழக்கமாக முஸ்லிம்களின் வாக்குகளை பிரிக்கும் ஒவைசி இந்த முறை மெகா கூட்​ட​ணி​யில் இணைய விரும்​பினார். ஆனால், மெகா கூட்​டணி அவரை புறக்​கணித்​தது. இதன் விளை​வும் தேர்​தல் முடிவு​களில் வெளிப்​படை​யாகத் தெரி​கிறது.பாஜக போட்​டி​யிட்ட 101 தொகு​தி​களில் 12-ல் தோல்வி அடைந்​தது. இந்த 12-ல் 5 தொகு​தி​களை ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யிடம் பாஜக இழந்​துள்​ளது.

பிஹாரின் முக்​கி​யத் எதிர்​கட்​சித் தலை​வ​ரான தேஜஸ்​வி​யுடன் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ரான ராகுல் காந்தி மேடை ஏறி​னாலும் அது ஏனோ பெரி​தாகச் சிறக்​க​வில்​லை. ககரியா பிரச்​சா​ரத்​தின்​போது ராகுல், அத்​தொகுதி மீனவர்​களு​டன் தண்​ணீரில் குதித்து மீன் பிடித்​ததற்​கும் உரிய வாக்​கு​கள் கிடைக்​காதது போலானது. கடந்த 2004 முதல் 20 ஆண்​டு​களாக ராகுல் அரசி​யலில் உள்​ளார். அவரது இந்த அனுபவத்​திற்கு 55 வயதில் இது​போன்ற சிறு​பிள்​ளைத்​தன​மான சாகசங்​கள் தேவை​யில்லை என இப்​போது விமர்​சிக்​கப்​படு​கிறது.

தேர்​தல் வியூக நிபுணர் பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்​சி​யாலும் ராகுலுக்கு அதி​க​மான இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. பிரி​யங்கா காந்தியின் ​ பிரச்சாரமும் எடுபடவில்லை. 20 வருடங்​களாக தொடரும் என்​டிஏ ஆட்​சிக்கு எதி​ரான வாக்​கு​கள் தமக்கு நிச்​ச​யம் வெற்​றித் தரும் என்ற மெகா கூட்​ட​ணி​யின் கணிப்பு தவறாகப் போனது. இப்​போது பிஹாரின் வெற்​றி​யால் தமிழ்​நாடு மற்​றும் கேரளா​வுக்​கும் பாஜக சவால் விடு​கிறது.



Read More

Previous Post

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சைக்குப் பிறகு, முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசனுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

Next Post

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படலாம் – நிபுணரின் அதிர்ச்சி கருத்து

Next Post
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படலாம் – நிபுணரின் அதிர்ச்சி கருத்து

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படலாம் – நிபுணரின் அதிர்ச்சி கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin