தன் உயிரையும் பொருட்படுத்தாது பொதுநலத்தோடு செயல்பட்ட வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூர் அரசாங்கம் கெளவுரவித்து சிறப்பித்துள்ளது.
ரிவர் வேலி பகுதியில் உள்ள கடையில் தீ விபத்து ஏற்பட்டது, அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெளிநாட்டு ஊழியர்கள் அங்கிருந்த பிள்ளைகள் மற்றும் பெரியவர்களை காப்பாற்றி உதவினர்.
அதில் இந்தர்ஜித் சிங், சுப்பிரமணியன் சரண்ராஜ், நாகராஜன் அன்பரசன் மற்றும் சிவசாமி விஜயராஜ் ஆகியோரின் தன்னலமற்ற தைரியத்தை பாராட்டிய மனிதவள அமைச்சகம் அவர்களை கெளவுரவித்தது.
சம்பவம் நடந்தநேரத்தில் அவர்கள் அருகில் உள்ள கட்டுமான தளத்தில் பணியில் ஈடுபட்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து நடந்த கடைவீட்டில் இருந்து புகைகிளம்பியதையும், மேலும் பிள்ளைகளின் அழுகுரலை கேட்டவுடன் அங்கு விரைந்து சென்று அவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்ததாவும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவர்களின் விரைவான சிந்தனையையும் துணிச்சலையும் மனிதவள அமைச்சகம் பாராட்டியது.
மேலும், அவர்களுக்கு பிரண்ட்ஸ் ஆஃப் ஏசிஇ (Friends of ACE) நாணயங்களும் வழங்கப்பட்டு கெளவுரவிக்கப்பட்டது.
அந்த விருதினை Forward Assurance and Support Team துணை இயக்குநர் ஜேசன் டங் (Jason Tang) வழங்கிக் கெளரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: sgministryofmanpower/fb

