முல்லைத்தீவீல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள
புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் கடந்த 7 மாதங்களாக தரம் 3
மாணவர்களுக்கான ஆசிரியர் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு தீர்வு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை
குறித்த போராட்டத்தை பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இன்று (28-07-2026) முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் தரம் 3
வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடந்த ஏழு மாதங்களாக நீடித்து வரும்
நிலையில், அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வலியுறுத்தி பெற்றோர்கள்
பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
தரம் 3 வகுப்பில் பயிலும் 36 மாணவர்கள் கடந்த 7 மாதங்களாக வகுப்பாசிரியர்
இன்றி கல்வியில் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை
உடனடியாக நிரந்தர அல்லது பதிலீட்டு ஆசிரியரை நியமித்து மாணவர்களின் கல்வி
சீரழிவதைத் தடுக்க கல்வித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது வலியுருத்தப்பட்டுள்ளது.

பாடசாலையின் ஆசிரியர் இல்லா பிரச்சினை தொடர்பில் வலயக்கல்லி அலுவலகத்திற்கு
முறையிட்டும் எந்த தீர்வும் இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நீண்டகாலமாக தொடரும் இந்த பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் விரைவான
தீர்வினைப் பெற்று தரவேண்டும் எனவும் இவ்வாறான நிலை தொடர்ந்தால்
மாணவர்களின் ஆரம்ப கல்வி பின்நோக்கி செல்லும் எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

