ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி பிரார்த்தனை முறையைப் பின்பற்றுகின்றனர். அந்த வகையில், தினந்தோறும் காலை ஒரு மணி நேரம் சுவாமி படத்தின் முன் உட்கார்ந்து தியானம் செய்வது எனது வழக்கம்.
எனக்கு மத நம்பிக்கை உண்டு. அதற்கு இணையாக, பிற மத நம்பிக்கைகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை பூண்டு வாழும் நான், வெவ்வேறு மத நம்பிக்கைகளைச் சார்ந்து வாழும் மக்கள், சண்டை, சர்ச்சை உள்ளிட்ட பல விவகாரங்களில் நீதி வேண்டி எங்கள்(நீதிபதிகள்) முன் வரும்போது அவர்களை எப்படி நடத்துகிறேன் என்பதற்கும், எனது தனிப்பட்ட மத நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை.
நமது நீதித்துறை பக்குவம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. அரசியலில் செயலாற்றுவோர் திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்கின்றனர். அதேபோலத்தான், எங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தயவுசெய்து எங்களை(நீதிபதிகளை) நம்புங்கள். எங்களின்(நீதிபதிகளின்) நன்னடத்தைக்கான உயரிய உத்தரவாதமாக எங்களின் எழுத்து(தீர்ப்பு) அமைகிறது” என்றார்.

