டெல்லியில் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற 18-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நிறைவடைந்தது. டெல்லிக் கூட்டுப் பிரகடனத்தை உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்து தொடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு ஆண்டுதோறும் கூடி அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான முக்கிய முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் கொண்ட அமைப்பாக விரிவடைந்த நிலையில் 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் டெல்லியில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.


