• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியது: பிரேசிலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு | BRICS summit begins

GenevaTimes by GenevaTimes
July 6, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியது: பிரேசிலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு | BRICS summit begins
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். முன்​ன​தாக, விமான நிலையத்தில் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்டு மோடிக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

பிரிக்ஸ் கூட்​டமைப்பு 2009-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இதில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசியா ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 2 நாள் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்​ப​தற்​காக அங்கு சென்​றுள்ள பிரதமர் மோடிக்கு, ரியோ டி ஜெனிரோ விமான நிலை​யத்​தில் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்​டு, உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

உச்சி மாநாட்​டின் முதல் நாளான நேற்று ‘சர்​வ​தேச அமை​தி, பாது​காப்​பு, சீர்​திருத்​தம், நிர்​வாகம்’ குறித்த சிறப்பு கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். பிரேசில் அதிபர் லூலா டா சில்வா மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மோடியை ஆரத்தழுவி வரவேற்றனர். மாநாட்டின் 2-ம் நாளான இன்று சர்​வ​தேச சுற்​றுச்​சூழல், சுகா​தா​ரம் குறித்த சிறப்பு கூட்​டம் நடை​பெறுகிறது. இதி​லும் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார். பிரிக்ஸ் மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்​க​வில்​லை. அவருக்கு பதிலாக, சீன பிரதமர் லி கியாங் பங்​கேற்​றுள்​ளார். ரஷ்ய அதிபர் புதின் காணொலி வாயி​லாக கலந்து கொள்​கிறார். மாநாட்​டில் பல்​வேறு நாடு​களின் தலை​வர்​களு​டன் பிரதமர் மோடி விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு: உலகின் பல்​வேறு நாடு​கள், குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள் மீது அமெரிக்க அரசு அதிக வரி​களை விதித்​துள்​ளது. இதுபற்றி பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் விரி​வாக விவா​திக்​கப்​பட உள்ளது. பிரிக்ஸ் கூட்​டமைப்பு சார்​பில் புதிய கரன்​சியை அறி​முகம் செய்யவேண்​டும் என்று கடந்த 2023-ல் பிரேசில் அதிபர் யோசனை தெரி​வித்​தார். இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்​டனம் தெரி​வித்​தார். ‘‘புதிய கரன்​சியை அறி​முகம் செய்​தால், பிரிக்ஸ் நாடு​கள் மீது 100 சதவீதம் வரி விதிப்​பேன்’’ என்று எச்​சரி​த்தார். இந்த விவ​காரம் குறித்​தும் பிரிக்ஸ் மாநாட்​டில் விவா​திக்​கப்​படும் என்று தெரி​கிறது.

பிரிக்ஸ் மாநாட்டை முடித்​துக்​கொண்​டு, பிரேசில் தலைநகர் பிரேசிலி​யா​வுக்கு பிரதமர் மோடி செல்​கிறார். அங்கு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்​வாவை சந்​திக்​கிறார். இந்த சந்​திப்​பின்​போது பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாக உள்ளன.

ஆகாஷ் ஏவு​கணை​கள்: பிரேசிலின் பாது​காப்​புக்​காக குறுகிய தூரம் பாயும் ஏவு​கணை​களை வாங்க அந்த நாடு முடிவு செய்​துள்​ளது. இதற்​காக பிரேசில் ராணுவ அதி​காரி​கள் கடந்த 2023-ல் சீனா, இந்​தி​யா​வில் முகாமிட்டு பல்​வேறு ஏவு​கணை​களை ஆய்வு செய்​தனர். வேறு சில நாடு​களின் ஏவு​கணை​களை​யும் பிரேசில் ஆய்வு செய்​தது. இறு​தி​யில், இந்​தி​யா​வின் ஆகாஷ் ஏவு​கணை​களை வாங்க பிரேசில் முடிவு செய்​தது. அதற்​கான ஒப்​பந்​தம் தற்​போது கையெழுத்​தாகும் என்று தெரி​கிறது.

பிரான்​ஸின் ஸ்கார்​பீன் ரக நீர் ​மூழ்கி கப்​பல்​களை இந்​திய, பிரேசில்கடற்​படைகள் பயன்​படுத்தி வரு​கின்​றன. பிரேசிலிடம் உள்ள இந்த வகை நீர்​மூழ்கி கப்​பல்​களை பராமரிப்​பது தொடர்​பாக​வும் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து இந்​தி​யா​வுக்​கான பிரேசில் தூதர் கென்​னத் பெலிக்ஸ் கூறிய​போது, ‘‘டெல்​லி​யில் கடந்த 2023-ல் ஜி-20 உச்சி மாநாடு நடந்​த​போது, பிரதமர் மோடி​யும், பிரேசில் அதிபர் லூலா டா சில்​வா​வும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதன்​படி இரு நாட்டு வர்த்தக உறவு வலு​வடைந்து வரு​கிறது. தற்போது, பாதுகாப்பு, வர்த்​தகம்​ தொடர்​பாக பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும்​’’ என்றார்​.



Read More

Previous Post

பயங்கரவாதம் மனித குலத்துக்கு பெரும் சவால்! – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா் மோடி

Next Post

ஜோகூர் பொருளாதார மண்டலத்திற்கான செயற்கைக்கோள் நகரமாக குளுவாங் மாறும் என்று மந்திரி பெசார் நம்பிக்கை | Makkal Osai

Next Post
ஜோகூர் பொருளாதார மண்டலத்திற்கான செயற்கைக்கோள் நகரமாக குளுவாங் மாறும் என்று மந்திரி பெசார் நம்பிக்கை | Makkal Osai

ஜோகூர் பொருளாதார மண்டலத்திற்கான செயற்கைக்கோள் நகரமாக குளுவாங் மாறும் என்று மந்திரி பெசார் நம்பிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin