கிழக்கு பிரான்சின் டோம்ப்லைன் நகரில் ஸ்கைடைவர்ஸை( (Skydiver) ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் பதினொரு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் விமானி மற்றும் 10 பயணிகள் உயிரிழந்தனர், அவர்களில் ஐந்து மாணவர்கள் மற்றும் ஐந்து பயிற்றுனர்களும் அடங்குவர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது விபத்து
ஒரு பாராசூட் பயிற்சிப் பள்ளியால் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த விமானம், நான்சி-எஸ்ஸி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தை அடுத்து மெர்த்-எட்-மொசெல் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
பிரெஞ்சு உள்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்குச் சென்று கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை
இந்தச் சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை என்று மெர்த்-எட்-மொசெல் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் ஈவ்ஸ் செகுய் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்தபோது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விமான நிலையத்தில் இருந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

