• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை அறிமுக விழா: மத்திய அரசுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தியது | Thiruvalluvar statue unveiling ceremony in Prayagraj

GenevaTimes by GenevaTimes
June 3, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை அறிமுக விழா: மத்திய அரசுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தியது | Thiruvalluvar statue unveiling ceremony in Prayagraj
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் மகா கும்​பமேளா​வின்போது நிறு​வப்​பட்ட திரு​வள்​ளுவர் சிலைக்கு அறி​முக விழா நடத்​தப்​பட்​டது. பாஷா சங்​கம், மத்​திய கலாச்​சா​ரத் துறை, சென்னை சிஐசிடி​யுடன் இணைந்து இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்​திய விழா​வில் தமிழர்​களான உத்தர பிரதேச மாநில அரசு அதி​காரி​கள் பங்​கேற்​றனர். உ.பி.​யின் பிர​யாக்​ராஜில் மொழிகளை பால​மாக்கி தேச ஒற்​றுமைக்​காக 49 ஆண்​டு​களாக செயல்​படும் பொதுநல அமைப்பு பாஷா சங்​கம்.

இந்த சங்​கம் கடந்த 34 ஆண்​டு​களாக பிர​யாக்​ராஜில் திரு​வள்​ளுவர் சிலை வைக்க வலி​யுறுத்தி வந்​தது. அந்த முயற்​சி​யில் கடந்த 10 ஆண்​டு​களாக இந்து தமிழ் திசை நாளிதழும் தொடர்ந்து செய்​தி​கள்​வெளி​யிட்​டு, பல்​வேறு வகை​களில் உதவியது. இறு​தி​யில் பிர​யாக்​ராஜ் டிஐஜி​யாக நியமிக்​கப்​பட்ட தமிழர் டாக்​டர் என்​.​கொளஞ்சி முயற்​சி​யால், மகா கும்​பமேளா விழா​வின் போது திரு​வள்​ளுவர் சிலை நிறு​வப்​பட்​டது.

இதர பல சிலைகள் நிறு​வப்​பட்டு அவற்​றுக்​கான திறப்பு விழா நடத்​த​வும், அதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​க​வும் திட்​ட​மிடப்​பட்​டது. ஆனால், மகா கும்​பமேளா​வில் கோடிக்​கணக்​கில் மக்​கள் குவிந்து நெரிசல் அதி​க​மான​தால் விழா நடை​பெற​வில்​லை. இதனால், திரு​வள்​ளுவர் சிலைக்​கான அறி​முக விழாவை பாஷா சங்​கம், மத்​திய கலாச்​சா​ரத் துறை, அலகா​பாத் அருங்​காட்​சி​யகம், செம்​மொழி தமிழாய்வு மத்​திய நிறு​வனம் (சிஐசிடி) ஆகிய​வற்​றுடன் ’இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து நடத்​தின.

மத்​திய அரசின் அருங்​காட்​சியக அரங்​கில் நடை​பெற்ற விழா​வில் வாராணசி மண்டல ஆணை​யர் எஸ்​.​ராஜலிங்​கம் உரை​யாற்​றி​னார். அப்​போது, ‘‘இங்கு திரு​வள்​ளுவர் சிலை நிறுவ கோரிக்கை விடுத்த பாஷா சங்​கம், அதற்கு உதவிய இந்து தமிழ் திசை நாளிதழ், டிஐஜி கொளஞ்சி ஆகியோ​ருக்கு எனது பாராட்​டுக்​கள்.

அறம், பொருள், இன்​பம் என 1330 குறள் எழு​தி​யது திரு​வள்​ளுவரின் தனித்​து​வம். அவர் தம் குறளில் தமிழ் எனும் வார்த்​தையை எங்​குமே பயன்​படுத்​த​வில்​லை. இது​போன்ற காரணங்​களால்​தான் அது உலகப் பொது​மறை​யாகக் கருதப்​படு​கிறது. தமிழகத்​துக்கு வந்த மகாத்மா காந்தி மூலமொழி​யானத் தமிழைக் கற்று திருக்​குறளைப் படிக்க விரும்​பி​னார்’’ எனத் தெரி​வித்​தார்.

பிர​யாக்​ராஜ் டிஐஜி டாக்​டர் என்​.​கொளஞ்சி பேசும்போது, ‘‘வெறும் ஏழு சொற்​களில் ஒரு குறள் ஆழமானக் கருத்​துக்​களை கொண்​டது. பிரதமர் அறி​முகப்​படுத்​திய யோகா தினம் போல், உலகத் திருக்​குறள் நாள் அல்​லது திரு​வள்​ளுவர் நாள் என சர்​வ​தேச அளவில் அறி​முகப்​படுத்த வேண்​டும். கல்​வித் திட்​டத்​தில் தேசிய அளவில் பள்ளி மாணவர்​களுக்கு ஒரு குறளை​யா​வது போதிக்க வேண்​டும்.

நம் நாட்​டின் தேசிய பறவை, விலங்​கு, மலரை போல், தேசிய நூலாக திருக்​குறள் அறிவிக்​கப்பட வேண்​டும். வட மாநிலங்​களில் ஒரு மனிதன் பிறக்​கும் போதே இறைவ​னால் எல்​லாம் நிர்​ண​யிக்​கப்​பட்​டு​விட்​ட​தாக நம்​பிக்கை உண்​டு. ஆனால், தெய்​வத்​தால் ஆகாதெனினும்.. எனும் குறளின்​படி இறைவ​னால் முடி​யாததை​யும் மனிதர் தன் முயற்​சி​யால் வெல்ல முடி​யும். எனவே, இங்​குள்​ளவர்​கள் ஒரு நாளுக்கு ஒரு குறளாவது படித்​தறிவது நல்​லது’’ என்று அறி​வுறுத்​தி​னார்.

இந்து தமிழ் திசை நாளிதழின் டெல்லி செய்​தி​யாளர் ஆர்​.ஷபி​முன்னா பேசுகை​யில், ‘‘ஒவ்​வொரு மதத்​துக்​கும் ஒரு மறைநூல் உள்​ளது. ஆனால், அனைத்து மதத்​தினரும் ஏற்​கும் ஒரே பொது நூலாக திருக்​குறள் அமைந்​துள்​ளது. தமிழகத்​தில் நண்​பர்​கள், தம்​ப​தி​கள், அரசி​யல்​வா​தி​கள், அதி​காரி​கள் உள்​ளிட்ட அனைத்து பிரி​வினருக்கு இடை​யில் நடை​பெறும் உரை​யாடல்​களில் திருக்​குறள் இடம்​பெறும். உ.பி.​யிலும் அது​போன்ற நிலை உரு​வாக இங்கு திரு​வள்​ளுவர் சிலை அவசி​யம். எனவே​தான் இந்து தமிழ் திசை நாளிதழ் அதற்​கான முயற்​சிக்கு உதவுவ​தில் தீவிரம் காட்​டியது’’ என்​றார்.

விழா​வில் பிர​யாக்​ராஜ் நகர மேயர் கணேஷ் சந்​திர கேசர்​வாணி​யும் கலந்து கொண்​டார். சிஐசிடி இயக்​குநர் முனை​வர் சந்​திரசேகரன் உரையை, மூத்த ஆய்​வாளர் முனை​வர் என்​.தேவி வாசித்​தார். அலகா​பாத் அருங்​காட்​சியக இயக்​குநர் முனை​வர் ராஜேஷ் பிர​சாத், பாஷா சங்க முன்​னாள் பொதுச் செய​லா​ளர் முனை​வர் எம்​.கோ​விந்​த​ராஜன், ஏ.கே.மிஸ்ரா ஆகியோர் உரை​யாற்​றினர். பாஷா சங்​கத்​தின் ஆனந்த் கில்​டி​யால் வரவேற்​புரை​யும், சாந்தி சவுத்ரி நன்​றி​யுரை​யும் வழங்​கினர்.

திருக்​குறள் மொழிபெயர்ப்பு நூலை, வாராணசி​யின் காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி வெளியிட்டிருந்தார். மத்​திய அரசின் செம்​மொழி தமிழாய்வு மத்​திய நிறு​வனம் (சிஐசிடி) வெளி​யீ​டான அந்​நூலின் அறி​முக விழா​வும் நடை​பெற்றது. விழா​வில் பங்​கேற்​றவர்​களுக்கு சிஐசிடி சார்​பில் திரு​வள்​ளுவரின் சிறிய உரு​வச் சிலை, திருக்​குறள் இந்தி நூல் ஆகியவை வழங்​கப்​பட்​டன. உ.பி.​யில் திரு​வள்​ளுவர் சிலை அமைக்க முதன்​முதலில் கோரிக்கை வைத்​த பாஷா சங்​க

பொதுச்​ செய​லா​ளர்​ மறைந்​த கே.சி.க​வுடு​வின்​ மனை​வி ரேகா கவுடுவை விருந்​தினர்​கள்​ ​பா​ராட்​டி கவுரவித்​தனர்​.



Read More

Previous Post

Tamilmirror Online || AI பயன்படுத்தி இருவரை தேடும் பொலிஸார்

Next Post

ஐபிஎல் 2025: முதல் முறையாக சாம்பியன் ஆக இருக்கும் ரெட் ஷர்ட் அணி.. ஐபிஎல் கோப்பைக்கான மோதலில் ஆர்சிபி – பஞ்சாப் கிங்ஸ்

Next Post
ஐபிஎல் 2025: முதல் முறையாக சாம்பியன் ஆக இருக்கும் ரெட் ஷர்ட் அணி.. ஐபிஎல் கோப்பைக்கான மோதலில் ஆர்சிபி – பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் 2025: முதல் முறையாக சாம்பியன் ஆக இருக்கும் ரெட் ஷர்ட் அணி.. ஐபிஎல் கோப்பைக்கான மோதலில் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin