Last Updated:
குழந்தைகள் தொடர்பான ஊட்டச்சத்து துறையில் தனது முக்கிய பங்களிப்பிற்காக அறியப்பட்ட ஒருவர் மேகனா நாராயண்.
சந்தையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டி உணவுகள் குறைவாக கிடைப்பது, பெற்றோருக்கு ஒரு பெரிய கவலையாக உள்ளது. ஜங்க் ஃபூட் அல்லது துரித உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து குழந்தைகள் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள். இது உடல் பருமன், சர்க்கரை பிரச்சனைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
குழந்தைகள் தொடர்பான ஊட்டச்சத்து துறையில் தனது முக்கிய பங்களிப்பிற்காக அறியப்பட்ட ஒருவர் மேகனா நாராயண். பெற்றோருக்கு ஒரு சரியான தீர்வைக் கண்டறியும் முயற்சியில் இறங்கிய மேகனா நாராயண், சௌரவி மாலிக் உடன் இணைந்து 2015-ல் வோல்சம் ஃபுட்ஸ் (Wholsum Foods) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
வோல்சம் ஃபுட்ஸ் என்பது Slurrp Farm-ன் தாய் நிறுவனமாகும். இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆரோக்கியமான உணவு விருப்பங்களை சந்தைப்படுத்துவதில் பெயர் பெற்றது. நிறுவனம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே, தங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளைத் தேடும் ஒவ்வொரு பெற்றோரின் முதல் தேர்வாக Slurrp Farm உருவெடுத்துள்ளது.
மேக்னா நாராயணனின் வாழ்க்கைப் பயணம்
மகாராஷ்டிராவின் புனேவில் மே 11, 1984 அன்று பிறந்த மேக்னா நாராயண், கல்வியில் சிறந்து விளங்கினார். நீச்சலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு, ஒரு தொழில்முறை நீச்சல் வீரராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. மேக்னா நாராயண் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சுவாரஸ்யமாக, அவர் சர்வதேசப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று, ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளார்.
1998-ம் ஆண்டு பாங்காக் மற்றும் தாய்லாந்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மேக்னா நாராயண் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். இருப்பினும், உயர் படிப்பில் கவனம் செலுத்துவதற்காக அவர் தனது நீச்சல் வாழ்க்கையை விட்டுவிட்டார்.
கல்வி
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கல்லூரிகளில் ஒன்றான பெங்களூரு பல்கலைக்கழகத்தில் மேக்னா நாராயண் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார். பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மேக்னா, அங்கு ரோட்ஸ் ஸ்காலராக கணக்கியல் பயின்றார்.
பின்னர், அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனது எம்பிஏ பட்டத்தையும் பெற்றார். இதன் பிறகு, அவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மெக்கின்சி நிறுவனத்திற்காக கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆலோசகராகப் பணியாற்றினார். இங்கு பணிபுரிந்தபோதுதான் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் பொது சுகாதாரத்தின் நிலையை ஆராயும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இதையும் படிக்க: Vehicle loan: 3 வருட கடன் காலம் vs 6 வருட கடன் காலம்: புதிய கார் வாங்குவதற்கு எந்த கடன் விருப்பம் சிறந்தது…?
2015-ம் ஆண்டில் வோல்சம் ஃபுட்ஸ் நிறுவனத்தை நிறுவினார் மேக்னா நாராயண். பாலிவுட் நடிகையும் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா இந்த நிறுவனத்தில் ஒரு முக்கிய முதலீட்டாளராக உள்ளதோடு, குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு விருப்பங்களை சந்தைப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார் என்பது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும். ஊடக அறிக்கைகளின்படி, இந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் ஈட்டி வருகிறது.
February 12, 2025 12:50 PM IST
பிரபல நடிகையின் ஆதரவுடன் ரூ.100 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை தொடங்கிய சர்வதேச நீச்சல் வீராங்கனை…!


