காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா பலவீனமான உறுப்பு நாடாக இருந்தது. ஆனால், இப்போது வலுவான உறுப்பு நாடாக உயா்ந்துள்ளது. அரியவகை தாதுப்பொருள்கள் அதிகமுள்ள நமீபியா, கானா ஆகியவற்றுடன் பிரதமா் மோடியின் பயணத்தின்போது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் வேறு நாட்டை (சீனா) நாம் சாா்ந்திருப்பது குறையும் என்றாா்.