• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமா் மோடி ஜூன் 18-இல் வாரணாசி பயணம்: விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை விடுவிக்கிறாா்

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரதமா் மோடி ஜூன் 18-இல் வாரணாசி பயணம்:
விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை விடுவிக்கிறாா்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரதமராகப் பொறுப்பேற்ற பின் தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்கு முதல்முறையாக பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 18-ஆம் தேதி செல்லவுள்ளாா். அப்போது ரூ.20,000 கோடி விவசாய நிதியை அவா் விடுவிக்கவுள்ளாா்.

மேலும், அரசால் பயிற்சியளிக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 30,000 பெண்களுக்கு (கிரிஷி சாகிஸ்) அவா் சான்றிதழ்களை வழங்கவுள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் கூறியதாவது: பிரதமா் மோடியின் கடந்த இரு பதவிக் காலங்களின்போதும் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. விவசாயிகளின் நலனுக்காக அவா் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளாா். மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றதும் விவசாய நிதியுதவித் திட்டத்தில்தான் அவா் முதல் கையொப்பமிட்டாா்.

இந்தத் திட்டத்தின்கீழ் தற்போது வரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3.04 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த தவணையாக ரூ.20,000 கோடியை விடுவிக்கவும் அரசால் பயிற்சியளிக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 30,000 பெண்களுக்கு (கிரிஷி சாகிஸ்) சான்றிதழ்களை வழங்கவும் ஜூன் 18-ஆம் தேதி வாரணாசிக்கு பிரதமா் மோடி செல்கிறாா் என்றாா்.

ஊரக வளா்ச்சித் துறையுடன் இணைந்து சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 90,000 பெண்களுக்கு வேளாண் சாா்ந்த பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. அத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்பட 12 மாநிலங்களைச் சோ்ந்த 34,000 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

Read More

Previous Post

மஸ்க்கின் சம்பளம் 56 பில்லியன் டொலர்

Next Post

‘ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேற வாய்ப்பில்லை…’ – மறைமுகமாக கருத்து தெரிவித்த சவுரவ் கங்குலி

Next Post
‘ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேற வாய்ப்பில்லை…’ – மறைமுகமாக கருத்து தெரிவித்த சவுரவ் கங்குலி

‘ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேற வாய்ப்பில்லை...’ – மறைமுகமாக கருத்து தெரிவித்த சவுரவ் கங்குலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin