மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இன்று மாலை நடைபெறும் உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழாவை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள நீதா முகேஷ் அம்பானி கலாசார மையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.



