தேர்தல் நடத்தை விதிகளை மீறி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி வாக்கு கேட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி எதிராக வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்தலே என்பவர் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 9ஆம் தேதி தேர்தல் பரப்புரை செய்த பிரதமர் மோடி, இந்து மற்றும் சீக்கிய தெய்வங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பெயரில் வாக்கு கேட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் பேசியதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பேச்சு வாக்காளர்களிடையே, சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வெறுப்புணர்வை உருவாக்கும் வகையில் அமைந்ததாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : திமுகவுடன் கூட்டணி.. காங்கிரசுக்கு பிரதமர் மோடி அடுக்கடுக்கான கேள்வி!
எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாதபடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நியாயமான முறையில் தேர்தல் நடைபெற, பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
