Last Updated:
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் 4 முக்கிய ஆலோசனைகள் நடந்தன. பாகிஸ்தானுக்கு வர்த்தக தடை, மின்னணு பொருட்கள் ஏற்றுமதி தடை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அடுத்தடுத்து 4 முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. இதில் பாகிஸ்தானுக்கு வர்த்தக தடை விதிப்பது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அடுத்தடுத்து 4 முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பாகிஸ்தானுக்கான மின்னணு பொருட்கள் ஏற்றுமதி தடை, வர்த்தக தடை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், நடைபெற்ற அரசியல் நடவடிக்கைகளுக்கான அமைச்சரவை கூட்டத்தில், நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டமும் நடந்தது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
பிரதமர் அடுத்தடுத்து 4 முக்கிய ஆலோசனை.. பாகிஸ்தான் மீது அடுத்த நடவடிக்கை இதுதான்.. வெளியான தகவல்!


