உயிரிழந்தவர்களின் தாயார் சந்தா பேகம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“ஷாஜாத் கான்(வயது 24), மகன் ரெஹான் கான்(வயது 17) மருந்து வாங்க பைக்கில் சென்றுள்ளனர். சடாய் புர்வா பேருந்து நிறுத்தத்திற்கு முன், எதிர் திசையில் இருந்து வந்த கார் கவனக்குறைவில், பைக்கை அதன் வலதுபுறத்தில் இருந்து அதிக வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் ரெஹான் மற்றும் ஷாஜாத் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கு பைக் ஓட்டுநர் ரெஹான் கான் மற்றும் ஷாஜாத் கான் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதே நேரத்தில், பலத்த காயமடைந்த சீதா தேவி சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கூடியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

&w=1200&resize=1200,675&ssl=1)