நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சன் மற்றும் உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ (Fabiano) கருவானாவை வீழ்த்தி இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நார்வே நாட்டில் கிளாசிக்கல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் டிங் லிரன், பாபியோனா கருவானா, ஹிக்காரு நாக்கமுரா, அலிரெசா பிரவுசா மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், சனிக்கிழமையன்று நடைபெற்ற 5ஆவது சுற்று ஆட்டத்தில், உலகின் நம்பர் 2 செஸ் வீரரான ஃபேபியானோவை பிரக்ஞானந்தா வென்றார். இதே போன்று, நார்வே செஸ்ஸில் 5 முறை உலக சாம்பியனான கார்ல்சனை 3 ஆவது சுற்றில் வீழ்த்தி பிரக்ஞானந்தா வென்றிருந்தார்.
Absolutely stunning performance by @rpraggnachess at #NorwayChess!
Defeating World No.1 Magnus Carlsen in Round 3 and World No.2 Fabiano Caruana in Round 5 in classical chess is an incredible achievement.
Welcome to the top 10, Praggnanandhaa! The entire chess world is in awe… pic.twitter.com/V9gI2DypKU
— M.K.Stalin (@mkstalin) June 2, 2024
உலகின் இரண்டு முன்னணி செஸ் வீரர்களை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க – உலகக்கோப்பை டி20 : கனடாவை 7 விக். வித்தியாசத்தில் வீழ்த்திய அமெரிக்க அணி….
சென்னை வீரர் பிரக்ஞானந்தாவின் திறமையை செஸ் உலகம் வியந்து பார்ப்பதாகவும் எக்ஸ் பதிவில் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
