கிராம நிலையிலும் பொதுமக்களிடம் புகாா்கள் பெறப்படுகிறது. சுமாா் 2.5 லட்சம் கிராம நிலையிலான தொழில் முனைவோா்களால் பொதுசேவை மையங்கள் செயல்படுத்தப்படுகிறது. இவா்கள் நடத்தும் சுமாா் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுசேவை மையங்களோடு மக்கள் குறைதீா்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணைக்கப்பட்டு மையப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுசேவை மையங்கள் மூலம், கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில், 5,580 குறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 1,697 குறைகளும் பஞ்சாபில் 238 குறைகளும் பதிவு செய்யப்பட்டன என மத்திய நிா்வாக சீா்திருத்தம், பொது மக்கள் குறைத் தீா்ப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

