• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பினாங்கு அறப்பணி வாரிய பதவி போராட்டம் – பி. இராமசாமி – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
April 6, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
பினாங்கு அறப்பணி வாரிய பதவி போராட்டம் – பி. இராமசாமி – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) தலைவர் ஆர்.எஸ்.என். ராயர். துணைத் தலைவர் யார் என்பது ஒரு இன-சமய அடையாள அரசியல் போட்டியாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில் என்ன வழிமுறைகள் உள்ளன என்பதை கண்ணோட்டமிடுவோம்.

இரண்டாம் துணை முதல்வர் ஜக்தீப் சிங் தியோ இந்த பதவிக்கு தாமாகவே ஆர்வம் கொண்டுள்ளார் என அறிவித்து, சட்டப்படி சீக்கியரும் ஒருவர் இந்தப் பதவியை வகிக்க வாய்புள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆனால், இந்திய சமூகத்தின் சில தரப்பினர் இந்த பதவி இந்து மத  தமிழருக்கே ஒதுக்கப்பட வேண்டும் என வாதிடுகின்றனர்.

இதற்கிடையே, முதல் அமைச்சர் சௌ கோன் யாவ், வாரிய ஆணையர்களின் தற்போதைய காலம் ஜூலை மாதம் முடியும் வரை எந்த நியமனமும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

சட்டப்படி, 1906ஆம் ஆண்டின் பினாங்கு இந்து அறப்பணி வாரியச் சட்டப்படி, தலைவருக்கு மதம் சம்பந்தப்பட்ட எந்தத் தகுதியும் கட்டாயம் அல்ல.

எனவே, ஒரு சீக்கியரோ அல்லது இந்து அல்லாத ஒருவரும் சட்டப்படி இந்த பதவியை வகிக்கலாம். PHEB என்பது மாநிலம் மற்றும் கூட்டாட்சி இரண்டும் இணையும் ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும். இது இந்து கோவில்கள், அறக்கட்டளைகள், சொத்துகள் மற்றும் இடுகாடுகளை நிர்வகிக்கிறது.

ஜக்தீப் வலுவாக அந்தப் பதவிக்கு குரல் கொடுக்காமல் இருந்தாலும், அவரை பதவிக்கு நியமிக்க ஆதரவாளர்கள் பின்னணியில் களமிறங்கி உள்ளனர்.

அவரது ஆதரவாளர்கள் சட்ட ரீதியாக அவர் தகுதி வாய்ந்தவர் என வாதிடுகின்றனர். ஆனால், எதிர்ப்பாளர்கள் இந்த வாரியம் இந்து சமூக விவகாரங்களை கையாளும் வகையில், மத அடையாளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.

வரலாற்று அடிப்படையில், செயலாளர் பதவிக்கும் மதம் தொடர்பான கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்துள்ளது — கடந்த காலத்தில் ஒரு மலாய் செயலாளரும் இருந்துள்ளார். அதற்கான ஒரே தகுதி அவர் ஒரு அரசு ஊழியராக இருக்க வேண்டும் என்பதே.

ராயரின் பதவிக்கு தொடர்ந்து எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. சிலர் அவரை மீண்டும் நியமிக்க ஆதரிப்பவர்களாக இருந்தாலும், சிலர் அவர் மற்றும் அவரது துணை இருவரும் மாற்றப்பட வேண்டும் என நினைக்கின்றனர்.

அதே நேரத்தில், ஜக்தீப்பின் நியமனத்துக்கு எதிராகவும் பலர் இருக்கின்றனர். அவர் பினாங்கு மாநிலத்தின் பெரும்பான்மையான தமிழர் இந்து சமூகத்தின் மதநல விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என வாதிடுகிறார்கள்.

ஒரு சிறிய தரப்பு தற்போதைய செயலாளரான டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜூவை ஆதரிக்கிறது. அவர் இந்தப் பதவிக்கு ஆர்வம் காட்டியிருக்கிறார். ஆனால், அவருக்கு நிர்வாக அனுபவம் குறைவாக இருப்பதும், பொது விவகாரங்களில் அவருடைய நிலைப்பாடுகள் ஒருங்கிணைப்பு இல்லாததாக இருப்பதும் அவரது தகுதியில் சந்தேகம் எழுப்புகின்றது.

மாநில அரசுக்கு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலிலேயே இருந்து தேர்வு செய்யும் கட்டுப்பாடு இல்லை என்பது முக்கியம்.

இந்து சமூகத்தில் இருந்து தகுதி வாய்ந்த ஒருவரை இந்த வாரியத்தை தலைமை தாங்க வைக்க முடியும்தான்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், மாநில செயற்குழுக் கூட்டங்களில் வாரியத்தையும், அதன் ஆணையர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பங்கேற்கலாம். இதுபோன்ற அணுகுமுறை முன்பு முயற்சி செய்யப்படாதிருந்தாலும், தற்போதைய அரசியல் செயல்திறன் குறைவைக் கருத்தில் கொண்டு, இது பரிசீலிக்கத்தக்கது.

புதிய தலைமைத் தேர்வில் சிக்கல் அடையாள  அரசியலில் மாட்டிக் கொள்ளாமல், வாரியத்தின் புதிய பாதையை வகுப்பதே முக்கியம் — குறிப்பாக தேசிய அளவிலான விரிவாக்கத்தை நோக்கி அதன் நோக்கத்தை புதுப்பிக்க வேண்டும்.

 – பி. இராமசாமி உரிமை இயக்கத்தின்  தலைவராவார்

Like this:

Like Loading…



Read More

Previous Post

ஓய்வை அறிவிக்கிறாரா தோனி! – சிஎஸ்கே பயிற்சியாளர் சொல்வது என்ன?  | MS Dhoni Retirement Speculation: Chennai Super Kings Coach Breaks Silence IPL 2025

Next Post

Tamilmirror Online || சிறப்புக் குழு மியன்மாருக்கு சென்றது

Next Post
Tamilmirror Online || சிறப்புக் குழு மியன்மாருக்கு சென்றது

Tamilmirror Online || சிறப்புக் குழு மியன்மாருக்கு சென்றது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin