புக்கிட் மெர்தாஜாம் | ஏப்ரல் 6, 2026
பினாங்கு, சிம்பாங் அம்பாட் (Simpang Ampat) பகுதியில் உள்ள ஜூரு தொழில்பேட்டை அருகே, 53 வயது மியான்மர் நாட்டுத் தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோரோங் ஐ.கே.எஸ் ஜூரு 5 (Lorong IKS Juru 5) பகுதியில் வீதியோரத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஒருவரின் உடலைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்:
உயிரிழந்தவரின் விலா எலும்புப் பகுதியில் ஆழமான கத்திக் குத்து காயம் இருந்ததை உறுதி செய்தனர்.
கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தி ஒன்றையும் உடலுக்கு அருகிலேயே போலீசார் கைப்பற்றினர்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்திய சந்தேக நபர், இக்கொலையைச் செய்துவிட்டுத் தனது நண்பர் ஒருவரிடம் இது குறித்துக் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த நண்பர், உடனடியாக நேற்று இரவு 10:50 மணியளவில் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். இதன் மூலமே இந்தக் கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது என்று, பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் கூறினார்.
உயிரிழந்தவரின் உடல் மேலதிக ஆய்விற்காகச் செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கொலையாளி யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அந்தச் சந்தேக நபரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சட்இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துப் போலீசார் குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் (கொலை வழக்கு) வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.
The post பினாங்கில் நள்ளிரவு பயங்கரம்: மியான்மர் தொழிலாளி குத்திக் கொலை! நண்பரே காட்டி கொடுத்த மர்மம் – போலீசார் வலைவீச்சு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

