Last Updated:
Cricket | இந்த விளையாட்டிலும் பெரும்பாலும் இந்திய தொழிலதிபர்களே அணிகளை வாங்கி நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அதாவது SA20 கிரிக்கெட் லீக்கின் நான்காவது சீசன் தற்போது தொடங்கியிருக்கிறது.
டி20 கிரிக்கெட் கேலரியில் இருந்த ரசிகருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. போட்டியை பார்க்க வந்தவர் ஒரு கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார். அந்த சுவாரஸ்ய சம்பவம் என்ன?.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் லீக் நடத்தப்படுகிறது. SA20 என்னும் பெயரில் நடத்தப்படும் இந்த விளையாட்டிலும் பெரும்பாலும் இந்திய தொழிலதிபர்களே அணிகளை வாங்கி நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அதாவது SA20 கிரிக்கெட் லீக்கின் நான்காவது சீசன் தற்போது தொடங்கியிருக்கிறது.
இதில் முதல் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் MI கேப் டவுன் இடையே போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. டெவன் கான்வே அதிகபட்சமாக 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். மெகா இலக்கை துரத்திய MI கேப் டவுன் அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரியான் ரிக்கல்டன் சிறப்பாக செயல்பட்டார்.
63 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் உட்பட 113 ரன்கள் எடுத்து அதிரடியில் பின்னி எடுத்தார். ரிக்கல்டனின் 11 சிக்ஸர்கள் மும்பை கேப் டவுனை வெற்றி பெறச் செய்யவில்லை என்றாலும், ஒரு ரசிகர் ரூ.1.07 கோடி சம்பாதிக்க அவை உதவியது. அது எப்படி முடியும் என யோசிக்கிறீர்களா? மஃபாகா வீசிய 13வது ஓவரின் நான்காவது பந்தில் ரிக்கல்டன் ஒரு சிக்ஸர் அடித்தார். அதனை கேலரியில் இருந்த ஒரு ரசிகர் ஒரு கையால் கேட்ச் பிடித்தார். அந்த ஒரு கை கேட்ச் தான் அவரை கோடீஸ்வரராக்கியது.
SA20 கிரிக்கெட் லீக்கில் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் விதமாக ரசிகர்கள் பிடிக்கும் ஒரு கை கேட்ச்சுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. BetwayCatch2Million என்கிற பெயரில் போட்டியின் போது ஒரு கையால் கேட்ச் பிடிப்பவர்களுக்கு வழங்கப்படும் இந்த பரிசு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் முதல் ஆட்டத்திலேயே ஒரு கையால் கேட்ச் பிடித்து கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் அந்த ரசிகர். இதற்கிடையே, ரியான் ரிக்கல்டன் கேப் டவுன் அணிக்காக சதம் அடித்து பிரகாசித்தாலும் அணியால் வெற்றி பெற முடியவில்லை. அந்த அணி 217 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


