நவம்பர் 2025இல் வெளியிடப்பட்ட 21வது தவணையில், 9,35,79,869 விவசாயிகள் நிதியைப் பெற்றனர். ஆனால், தற்போதைய 22வது தவணையில், அந்த எண்ணிக்கை 9.32 கோடியாக உள்ளது. அதாவது, கடந்த தவணையுடன் ஒப்பிடும்போது இந்த முறை சுமார் 3.8 லட்சம் விவசாயிகள் பயனாளிகளின் பட்டியலில் இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், பணம் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம்.


