அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கடந்த 21-ஆம் தேதி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவருக்கான அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்த நிலையில், மேலும் 7 நாட்களுக்கு காவலை நீடிக்கக்கோரி அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது, அரவிந்த் கெஜ்ரிவால் தனக்குத் தானே வாதம் செய்தார்.
அப்போது, ஆம் ஆத்மி கட்சியை இல்லாமல் செய்வது தான் அமலாக்கத்துறையின் நோக்கம் என அவர் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை தரப்பு, கோவா தேர்தலில் லஞ்சப் பணத்தை ஆம் ஆத்மி செலவு செய்ததற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக குறிப்பிட்டது. மேலும், விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன், டிஜிட்டல் சாதனங்களின் பாஸ்வேர்டு எதையும் அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை தெரிவிக்காததால், அவற்றை ஆய்வு செய்ய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். மக்களவைத் தேர்தல் நெருங்கிய நிலையில் கெஜ்ரிவாலுக்கான அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…