Last Updated:
பஞ்சாபில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் பதன்மஜ்ரா, போலீஸை துப்பாக்கியால் சுட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ, போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜிராக்பூர் பகுதியை சேர்ந்த பெண் தந்த பாலியல் புகாரின் பேரில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஹர்மீத் பதன்மஜ்ரா கைது செய்யப்பட்டார். ஏற்கனவே திருமணமான ஹர்மீத், தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த புகாரை அடுத்து எம்.எல்.ஏ பதன்மஜ்ரா கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, போலீஸாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஹர்மீத் பதன்மஜ்ரா தப்பிக்க உதவியதாக கார் ஒன்றை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அதில், இருந்த 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக, வெள்ளப்பாதிப்பை ஆளும் ஆம் ஆத்மி அரசு சரியாக கையாளவில்லை என பதன்மஜ்ரா குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும், டெல்லியில் இருந்து ஆம் ஆத்மி தலைமை பஞ்சாப்பை ஆட்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இப்படி சொந்த கட்சியின் ஆட்சியையே அவர் விமர்சித்து வந்த நிலையில், பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
September 02, 2025 7:59 PM IST


