Last Updated:
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து, ஐநா கூட்டத்தில் தேசிய அங்கீகாரம் வழங்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
காசாவில் அமைதி நிலைநாட்டுவதை உறுதி செய்யும் விதமாக இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்க பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ள இங்கிலாந்து, கனடா, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கு ஒருமித்த ஆதரவை அளித்துள்ளன.
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜி7 கூட்டமைப்பில் இருந்து முதல் நாடாக கனடா, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கு முன்னதாக, எதிர்கால உச்சிமாநாடு இன்று தொடங்குகிறது. இக்கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு தேசிய அங்கீகாரம் வழங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
September 22, 2025 7:48 AM IST


