பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு பிரதான ரயில் பாதைகளில் தீ வைப்பு சம்பவம் நடந்தேறியுள்ளது.
இதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. 8 லட்சம் பேர் ரயிலில் செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர்.
விளையாட்டு உலகின் ம்க முக்கியமான விளையாட்டாக ஒலிம்பிக் விளங்குகிறது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியில் உலகின் பல நாடுகளும் கலந்துகொள்கின்றனர்.
விளையாட்டு உலகில் ஜொலிக்கும் பல வீரர்களுக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே வாழ்நாள் கனவாக இருக்கும். இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் தொடங்கியுள்ளன.
இதையும் படிக்க:
பாரிசில் 33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள்… கோலாகல தொடக்கம்!
இந்நிலையில் ரயில் இருப்புப்பாதையில் தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையேயும் விளையாட்டு வீரர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ வைப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களால் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. பல்வேறு நகரங்களுக்கு செல்ல தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசு தயார் நிலையில் வைத்திருந்தது. எனினும் ரயில்களில் செல்ல முடியாததால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், தீவைப்பு சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைக்கும் பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
