Last Updated:
பிரான்சின் மதிப்பு மிக்க அரச குடும்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உலகம் முழுவதும் பேசுபொருளானது.
பிரான்சின் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கு பலவீனமான ‘Password’ பயன்படுத்தப்பட்டதே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் நுழைந்த கொள்ளையர்கள், 102 மில்லியன் டாலர் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பிரான்சின் மதிப்பு மிக்க அரச குடும்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உலகம் முழுவதும் பேசுபொருளானது.
இந்த நிலையில் அதன் பாதுகாப்பு அமைப்பின் ‘Password’-ஆக அருங்காட்சியகத்தின் பெயரான ’லூவ்ரே’ என்பது மட்டுமே பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. முன்னதாக விசாரணைக்கு ஆஜரான லூவ்ரே இயக்குனர் லாரன்ஸ் டெஸ் கார்ஸ், அருங்காட்சியகத்தில் போதுமான வெளிப்புற சிசிடிவி கேமராக்கள் அமைக்காததும், திருடர்கள் பயன்படுத்திய ஜன்னலை கண்காணிக்காமல் விட்டதும் தங்கள் தரப்பு தவறு என ஒப்புக் கொண்டார். இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகத்திற்கு பலவீனமான ‘Password’ பயன்படுத்தியிருப்பது பல்வேறு விமர்சனங்களை தூண்டியுள்ளது.
November 06, 2025 9:49 PM IST


