• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பாரத் கவுரவ் திட்டத்தின்கீழ் ரயில் சேவை: தெற்கு ரயில்வேக்கு ரூ.34 கோடி வருவாய் | 34 crores revenue for southern railway

GenevaTimes by GenevaTimes
April 9, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பாரத் கவுரவ் திட்டத்தின்கீழ் ரயில் சேவை: தெற்கு ரயில்வேக்கு ரூ.34 கோடி வருவாய் | 34 crores revenue for southern railway
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: பாரத் கவுரவ் திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் (2023-24) தனியார் நிறுவனங்கள் சார்பில், 42 ரயில் பயண திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலமாக, தெற்கு ரயில்வேக்கு ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்புவாய்ந்த இடங்களை மக்கள் கண்டுகளிக்கும் வகையில், ‘பாரத்கவுரவ்’ ரயில் திட்டத்தை இந்தியரயில்வே கடந்த 2021-ம் ஆண்டுநவம்பர் 23-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் ரயில்களை இயக்குவது மட்டுமே ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு. மற்ற சேவைகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும்.

தெற்கு ரயில்வேயில் முதல் ரயில் சேவை கோயம்புத்தூர் – ஷீரடிக்கு இயக்கப்பட்டது. இதன்பிறகு, வெவ்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, கோடைகால சிறப்பு சுற்றுலா ரயில்களை இயக்குவதற்கு தனியார் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், பாரத் கவுரவ்திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் (2023-24) தனியார் நிறுவனங்கள் சார்பில், 42 ரயில் பயணத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலமாக, தெற்கு ரயில்வேக்கு கடந்த நிதியாண்டில் (2023-24) ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோயம்புத்தூர்-ஷீரடிக்கு முதல் ரயில் சேவை கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் தொடங்கியது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட ரயில் பயணத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம், ரயில்வேக்கு கணிசமாக வருவாய் கிடைத்துள்ளது.

பாரத் கவுரவ் திட்டத்தின்கீழ், ரயில்கள் இயக்க சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அனுபவம் வாய்ந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு முன்னுரிமைஅளிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Read More

Previous Post

தோனி போனாரு.. அதோடு இவர் வாழ்க்கையும் போச்சு.. இந்திய அணியில் புலம்பும் மூத்த வீரர் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

மொசாம்பிக் கடற்கரையில் படகு மூழ்கி 90 பேர் உயிரிழப்பு | Over 90 Killed As Boat Sinks Off Mozambique Coast

Next Post
மொசாம்பிக் கடற்கரையில் படகு மூழ்கி 90 பேர் உயிரிழப்பு | Over 90 Killed As Boat Sinks Off Mozambique Coast

மொசாம்பிக் கடற்கரையில் படகு மூழ்கி 90 பேர் உயிரிழப்பு | Over 90 Killed As Boat Sinks Off Mozambique Coast

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin