கோலாலம்பூர்:
சபா, பாப்பாரில் உள்ள கம்போங் ஸ்ரீ தஞ்சோங், பெங்காலாட் கெச்சில் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், மாடி வீடு ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலானதில் 72 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை ஆறு 6.29 மணி அளவில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்பு, மீட்புத் இலாகாவினர், ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட போதிலும், அதற்குள் வீட்டின் 90 விழுக்காடு பகுதி தீக்கிரையாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தொடர்ந்து காலை 7.57 மணி அளவில், வீட்டின் குளியலறைப் பகுதியில் மயக்கமுற்றுக் கிடந்த அந்த முதியவரை மீட்ட மீட்புப் படையினர், அவர் தீ புகையினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.




