Last Updated:
நிர்வாகத்தின் நம்பிக்கையை காப்பாற்றாமல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை பாபர் ஆஸம் வெளிப்படுத்தி வருகிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆஸம் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவர் குறித்து அந்த அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் அவர் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருக்கும் பாபர் ஆசமின் ஆட்டங்கள் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்திய வருகிறது. T20 போட்டிகளில் விளையாடும் அவர் ஒரு நாள் போட்டிகளை போன்று விளையாடுவதாக கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடியுள்ள பாபர் ஆஸம், 11 போட்டிகளில் 202 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 103 ஆகவே உள்ளது. இதனால் அவரை அணியில் எடுத்திருக்கும் சிட்னி சிக்ஸர்ஸ் நிர்வாகம் அவரை எப்படி பயன்படுத்தலாம் என ஆலோசித்து வருகிறது.
தனது மோசமான ஆட்டம் காரணமாக 2025 ஆசிய கோப்பை தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அடுத்ததாக பிப்ரவரி மாதம் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் அனுபவிக்க வீரர் என்பதால் அவரை பாகிஸ்தான் நிர்வாகம் மீண்டும் அணிக்குள் அழைத்திருக்கிறது.
இருப்பினும் நிர்வாகத்தின் நம்பிக்கையை காப்பாற்றாமல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை பாபர் ஆஸம் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் செய்தியாளர்கள் பாபர் ஆசமின் பேட்டிங் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், “எப்பொழுதாவது ஒருநாள் பாபர் ஆஸமை பற்றி கேள்வி இல்லாத ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். அணியில் அவரைத் தவிர்த்து இன்னும் 14 வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் கொஞ்சம் கேள்வி கேட்கலாம். பாபர் ஆஸமை நிம்மதியாக பேட்டிங் செய்ய விடுங்கள்” என்று கூறினார்.


