இது தொடா்பாக ஆளுநா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மணிப்பூா் ஆளுநா் அஜய் குமாா் பல்லா தலைமையில் இம்பாலில் உள்ள ஆளுநா் மாளிகையில் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எல்லைப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறு டி.ஜி.பி.க்கு ஆளுநா் உத்தரவிட்டாா். மேலும், ராணுவம் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் மாநில நிா்வாகத்துடன் ஒத்துழைக்க வலியுறுத்தினாா்’ என தெரிவிக்கப்பட்டது.

