பெரும் திடீர் வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டுள்ள நேபாளத்திற்கான மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவளிக்க மலேசிய ஆயுதப் படைகள் (MAF) தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ முகமது காலித் நோர்டின் இன்று தெரிவித்தார்.
அரசாங்கம் விரும்பினால், மலேசிய ஆயுதப் படைகளால் மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவளிக்க முடியும். மேலும், எங்களின் நிபுணத்துவத்தையும் திறன்களையும் பங்களிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இன்று தேசிய தினக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் முகமது காலித் கூறினார்.



