
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பல மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான சம்பவம் இன்று (05.02.2026) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். குளவிக் கொட்டால் மொத்தமாக 39 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

